மனிதக் கூட்டங்களின் நடுவே
புழுதித் தெருவழியே நடந்து கொண்டிருக்கும்
ஓர் அநாமதேயம்
நான் என்பதை உணர்கிறேன்
புதிதாகப் போடப்பட்ட தார் வீதியில்
நான் நடக்கையில்
நகரத்தின் மீது அமைதி இறங்கும்
ஆனால்
நான் வழிதவறிப் போவதாக
உணர்கிறேன்
விரைவில்
நான்
இல் பொருளான கிணற்று நீருக்கு ஏங்கும்
வெய்யில் வாட்டிய சருகாகி விடுவேன்!
நான் யார் என்று
எனக்கே தெரியவில்லை
ஆங்கில மூலம்: பார்வதி அரசநாயகம்
தென்னிலங்கைக் கவிதைகளில் இருந்து...
No comments:
Post a Comment