நல்ல நண்பன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...
Monday, July 30, 2012
விழிப்பு
என் கனவுகளைப் புரிந்து கொள்ளாத
மனிதக் கூட்டங்களின் நடுவே
புழுதித் தெருவழியே நடந்து கொண்டிருக்கும்
ஓர் அநாமதேயம்
நான் என்பதை உணர்கிறேன்
புதிதாகப் போடப்பட்ட தார் வீதியில்
நான் நடக்கையில்
நகரத்தின் மீது அமைதி இறங்கும்
ஆனால்
நான் வழிதவறிப் போவதாக
உணர்கிறேன்
விரைவில்
நான்
இல் பொருளான கிணற்று நீருக்கு ஏங்கும்
வெய்யில் வாட்டிய சருகாகி விடுவேன்!
நான் யார் என்று
எனக்கே தெரியவில்லை
ஆங்கில மூலம்: பார்வதி அரசநாயகம்
தென்னிலங்கைக் கவிதைகளில் இருந்து...
Sunday, July 29, 2012
Subscribe to:
Comments (Atom)